ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இந்த தேர்தல் முறைக்கு திமுக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், நாம் தமிழர் உட்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையை பார்த்து திமுக அச்சப்படுகிறது.

வரும் ஜனவரி 16ஆம் தேதிக்குள் கருத்துக்கள் தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு இந்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியிருந்த நிலையில் இந்திய சட்ட ஆணையத்திற்கு  அதிமுக பதில் அனுப்பியுள்ளது. மக்கள் அனைவரும் ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரிப்பார்கள் என்று  தெரிவித்தார்.