ஐபிஎல் மெகா ஏலம் தற்போது சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் சிறப்பான வீரர்களை வாங்குவதில் போட்டி போட்டு வருகிறது. அந்த வகையில் பிரேசர் மெக்கர்கை வாங்க ஏலத்தில் கடும் போட்டி நிலவியது. இவரை இறுதியாக பஞ்சாப் அணி 9 கோடிக்கு ஏலத்தில் கேட்டது. கடைசியில் அதே தொகைக்கு டெல்லி அணி RTM முறையை பயன்படுத்தி அவரை தக்க வைத்தது.