மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பிரேமம் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் தான் அனுபமா பரமேஸ்வரன். அதன் பிறகு இவர் தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக கொடி என்ற படத்தில் அறிமுகமானார். ஆனால் இந்த படம் தோல்வியை சந்தித்தாலும் அடுத்ததாக நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளி போகாதே என்ற படத்தில் நடித்தார். ஆனால் இந்த படமும் அவருக்கு தோல்வியை கொடுத்தது. இதன் காரணமாக இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் எதுவுமே கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் தன் கவனத்தை திருப்பினார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அனுபமா பரமேஸ்வரன், சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி உள்ளது. இதயத்திற்கு பக்கத்திலேயே டாட்டூ குத்தியுள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் அந்த இடத்தில் டாட்டூ குத்தனுமா என கிண்டல் அடித்து வருகின்றனர்.