தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் பகுதியில் மழை வெள்ளத்தால் சூழ்ந்த குடியிருப்பில் ஒன்றரை வயது குழந்தையுடன் தவித்து வந்த நிறைமாத கர்ப்பிணியான அனுசியாவை தகவல் அறிந்து எம்பி கனிமொழி மற்றும் ஆயுதப்படை வீரர்கள் இணைந்து மீட்கும் காணொளி சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில் மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அனுசியாவிற்கு ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்ததாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கனிமொழி பகிர்ந்துள்ளார்.