
சிவகங்கை மாவட்டம் சிலையா ஊரணி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தனியார் வங்கியில் கலெக்சன் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இளையான்குடியைச் சேர்ந்த செந்தில் முருகன் என்பவர் அறிமுகமானார்.
அப்போது தனது நண்பர்களான பாலச்சந்தர், பார்த்தசாரதி ஆகியோர் தேசிய வங்கிகளில் உயர் அதிகாரிகளாக வேலை பார்க்கின்றனர். அவர்கள் மூலம் வங்கியில் வேலை வாங்கி தருவதாக செந்தில்குமார் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.
இதனை நம்பி வெங்கடேசன் அவரது உறவினர்களான கோபிநாத், ஆரோக்கியசாமி, அருண் பாண்டியர் ஆகியோர் கடந்த 2023-ஆம் ஆண்டு செந்தில் முருகனிடம் 33 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளனர். ஆனால் கூறியபடி அவர்கள் கூறியபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்ட போது 15 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி கொடுத்தனர்.
மீதமுள்ள பணத்தை தராமல் காலம் தாழ்த்தியுள்ளனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வெங்கடேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் செந்தில் முருகன், பானு சந்தர், பார்த்தசாரதி ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.