தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் ஒருவர் பிரியாமணி. தேசிய விருது வாங்கிய இவர்  பாரதிராஜா இயக்கிய “கண்களால் கைது செய்” படத்தின் மூலம் அறிமுகமானாலும் முதல் படம் இவருக்கு கை கொடுக்கவில்லை. பின்பு அது ஒரு கனாக்காலம் படத்தில் நடித்தார். அதனை அடுத்து இவரை உச்சத்திற்கு கொண்டு சென்ற படம் என்றால் பருத்திவீரன் படம் தான். படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லாததால் முஸ்தபா என்பவரை 2017 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தில் ஒரு சில மோசமான விமர்சனங்களை தான் எதிர்கொண்டதாக முந்தைய பேட்டி ஒன்றில் பிரியாமணி கூறியுள்ளார்.

அதாவது என்னுடைய நிச்சயதார்த்த போட்டோ வெளியிட்டதும் என்னை பிடித்தவர்கள் வாழ்த்து கூறினாலும் சிலர் தேவையற்ற வெறுப்பு செய்திகளை பரப்பினார்கள். பிரபலம் என்பதால் என்ன வேண்டுமானாலும் சொல்வார்களா? என்பதை புரிந்து கொண்டேன். ஆனால் அந்த விமர்சனங்கள் மிகவும் பாதித்தது. திருமணத்திற்கு பிறகு மோசமான செய்திகள் வந்தது. அது அனைத்தும் என்னை மூன்று நாட்களுக்குள் ரொம்பவே பாதித்தது. இப்போதும் கூட நான் அவரோடு ஒரு புகைப்படம் போட்டால் போதும் கமெண்ட்களில் பாதி எங்களுடைய மதம் மற்றும் சாதி பற்றியே தான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.