மலையாள சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் மோகன்லால.  சமீபத்தில் இவர் இயக்கி நடித்த திரைப்படம் பரோஸ். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனை தொடர்ந்து மோகன்லால் பிரிதிவிராஜ் இயக்கத்தில் எம்புரான் படத்திலும், இயக்குனர் நந்தா கிஷோர் இயக்கிய “விருஷபா” படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் மோகன்லால் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் . இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “என்னுடைய அடுத்த படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். திருவனந்தபுரம் கொல்கத்தாவில் விரைவில் படமாக்கப்படவுள்ளது. அனூப் மேனன் எழுதியிருக்கும் இந்த படத்தை டைம்லெஸ் மூவிஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் கதையானது என்னுடைய இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது” என்று கூறியுள்ளார்.