சென்னை மாவட்டம் அசோக் நகரை சேர்ந்தவர் லோகேஷ். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி பவானி. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பவானி தனது குழந்தைகளுடன் மாம்பலத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்றார்.

நேற்று லோகேஷ் தனது மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வருவதற்காக மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது லோகேஷ் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் பவானி அவருடன் செல்ல மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த லோகேஷ் பிளேடால் பவானியில் வலது கையில் அறுத்தார்.

அதை தடுக்க வந்த மாமியாரையும் பிளேடால் கீறியுள்ளார். இதனால் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் லோகேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.