தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில்  அரசியல் கட்சிகள், தங்களது சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சுவர் விளம்பரமும் செய்கின்றன.

அந்தவகையில் காங்., சார்பில் செய்யப்பட்ட சுவர் விளம்பரத்தில் கை சின்னத்துடன் “தேர்தல் 19.4.23″ என எழுதப்பட்டுள்ளது. இதைப்பார்த்த எதிர்தரப்பினர், தேர்தல் நாளையே காங்., கட்சி மாற்றிவிட்டதாக கிண்டல் செய்கின்றனர்.