விஜய் நடிப்பில் வெளியாகி வரும் கோட் திரைப்படத்தின் வெளியீட்டு விழா கேரளாவில் நள்ளிரவு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தை விட முன்னதாக கேரளாவில் திரைப்படம் வெளியாக இருப்பதால், கோயம்புத்தூர், தென்காசி போன்ற கேரள எல்லைப்புறங்களில் வசிக்கும் விஜய் ரசிகர்கள் கேரளாவிற்கு சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விஜய் தனது ரசிகர்களிடம், திரைப்பட வெளியீட்டு விழாவில் கட்சி கொடிகளை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார். சினிமாவையும் அரசியலையும் பிரித்துப் பார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். இந்த அறிவிப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர். ஆனால், விஜய்யின் இந்த அறிவுரையை மீறி, சில ரசிகர்கள் கட்சி கொடிகளை பயன்படுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பல இடங்களில் கட்சி பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.

விஜய்யின் அறிவுரைக்கு எதிராக ரசிகர்கள் செயல்படுவது வருத்தமளிக்கிறது என சினிமா வட்டாரங்கள் மற்றும் சில விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு நடிகரின் வெற்றிக்கு அவரது ரசிகர்களின் ஆதரவு மிக முக்கியம். ஆனால், அந்த ஆதரவு எப்போதும் நடிகரின் கருத்துக்களுக்கு எதிராக இருக்கக்கூடாது. விஜய் போன்ற பிரபலங்கள் தங்கள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பது, அவர்களது கருத்துக்களை மதித்து நடப்பது தான். என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.