பஞ்சாப் மாநிலம் பர்மாலா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் கால்பந்து விளையாட்டு வீரர்கள் 4 பேர் உணவருந்தியுள்ளனர். ஆனால் அவர்கள் பில்லை கட்டாமல் தகறாரு செய்துள்ளனர். இதனால் உணவகத்தின் உரிமையாளர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து கான்ஸ்டபிள் தர்ஷன் சிங் உள்ளிட்ட காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விளையாட்டு வீரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்தனர்.

அப்போது அவர்கள் நான்கு பேரும் தாக்குதல் மேற்கொண்டதில் கான்ஸ்டபிள் தர்ஷன் சிங்க் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மாநில முதல்வர் பகவந்த் மான் கான்ஸ்டபிள் தர்ஷன் சிங்கின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார்.