
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருவதால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறும்போது, ஐயா ஐயாவாக இல்லை. ஐயா குழந்தையாக மாறிவிட்டார். அவர் கூறுவது அத்தனையும் பொய்.
ஐயாவை அவருடன் இருக்கும் மூன்று பேர் தங்கள் சுயலாபத்திற்காக பயன்படுத்தி கொண்டதால்தான் நான் தலைவர் பதவிக்கு வந்தேன் என கூறினார். மேலும் தெருவில் இலந்தை பழம் விற்பவர்களை அழைத்து வந்து ராமதாஸ் பதவி தருவதாகவும் கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பாமக எம்எல்ஏ அருள் கூறியதாவது, தெருவில் இழந்த பழம் இருப்பவர் கேவலமானவரா? ராமதாஸ் அவமானப்படுத்துவதாக நினைத்து தெருவோர வியாபாரிகளை பாட்டாளிகளை அன்புமணி அவமானப்படுத்தியுள்ளார்.
ஐந்து ஆண்டுகளாக ராமதாஸ் குழந்தையாக மாறிவிட்டார் என் அன்புமணி கூறுகிறார். அந்த குழந்தை தானே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உங்களை தலைவராக அறிவித்தது. அப்படி என்றால் குழந்தையின் அறிவிப்பு எப்படி செல்லும்? என எம்எல்ஏ அருள் கேள்வி எழுப்பியுள்ளார்.