யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கான புதிய விதிமுறைகள் நாடு முழுவதும் அமலுக்கு  வந்தது. சிறிய பெட்டிக்கடை முதல் வணிக வளாகங்கள் வரை யுபிஐ மூலமே பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. என்.பி.சி.ஐ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி பொதுவாக பயன்படுத்தப்படும் யுபிஐ பரிவர்த்தனை நிலையை சரிபார்த்தல் மற்றும் பரிவர்த்தனையை ரத்து போன்றவர்களுக்கான ரெஸ்பான்ஸ் டைம் எனப்படும் பதிலளிப்பு நேரம் 30 வினாடிகளில் இருந்து 10 வினாடிகளாக குறைக்கப்பட்டிருக்கிறது.

அக்கவுண்ட் ஐடிகளை சரிபார்க்கும் பதிலளிப்பு நேரம் 15 வினாடிகளில் இருந்து 10 வினாடிகளாக குறைக்கப்பட்டிருக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களது யுபிஐ ஐடியிலிருந்து வங்கி கணக்கில் உள்ள இருப்பை ஒரு நாளைக்கு 50 முறை சரி பார்க்க முடியும் என்ற கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. நெட்வொர்க்கில் தேவையற்ற சுமையை தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.