தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான யசோதா திரைப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆன நிலையில் அடுத்ததாக சாகுந்தலம் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. நடிகை சமந்தா தற்போது மயோசிடிஸ் என்னும் அரிய வகை தசை அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் உடல் நலம் சரியில்லாத போதிலும் தன்னுடைய பணிகளில் கவனம் செலுத்தும் சமந்தா அண்மையில் சாகுந்தலம் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது நடிகை சமந்தா கையில் ஜெபமாலை வைத்திருந்தார். அந்த நிகழ்ச்சியின் போது சமந்தா கண் கலங்கி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது. நடிகை சமந்தா தற்போது ஜெபமாலையை கையில் வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் கடவுளே துணை என்று சமந்தா சரணாகதி ஆகிவிட்டதாக கூறி வருகிறார்கள். மேலும் நடிகை சமந்தா விரைவில் குணமடைந்து வருவார் என்றும் ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.