வங்க கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் தற்போது அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை டாணா புயலாக வலுப்பெறும். அதாவது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 24-ஆம் தேதி வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் கடற்கரையை புயல் அடையும்.

பின்னர் ஒடிசாவின் பூரிக்கும் வங்கத்தின் சாகத்தீவுகளுக்கும் இடையே அதிதீவிர புயலாக வலுப்பெற்று கரையை கடக்க உள்ளது. இந்த புயலால் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு கிடையாது. இருப்பினும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் காலை முதல் மழை பெய்து வரும் நிலையில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது