
கோவையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எனது வாழ்க்கையில் கடந்த மூன்று ஆண்டுகள்தான் எனக்கு கஷ்டமான காலம் என்றும் கடந்த மூன்று ஆண்டுகள் எனக்கு கடினமானதாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், மூன்று ஆண்டுகளாக கஷ்டப்பட்டு தான் தலைவர் சேரில் அமர்ந்து உள்ளேன். பொதுவாகவே ஒருவர் அரசியலுக்கு வருவது என்றால் அவருக்கு பொறுமை, சகிப்புத்தன்மை மற்றும் சமரசம் ஆகிய மூன்றும் கட்டாயம் இருக்க வேண்டும்.
இந்த அரசியலில் நாம் இருக்க வேண்டுமா என பலமுறை யோசித்துள்ளேன், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் புது டீம் வருகிறது என்று அவர் கூறியுள்ளார். இதனால் அண்ணாமலை அரசியலில் இருந்து விலகுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த மாதம் அரசியல் படிப்புக்காக அண்ணாமலை லண்டன் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.