
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். பின்பு நாக சைதன்யா சோபிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமந்தா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமலேயே இருக்கிறார். இதற்கிடையில் சமந்தா மையோ சிட்டிஸ் எனும் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
அதன் பிறகு நோயிலிருந்து குணமடைந்து மீண்டும் பிஸியாக படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். சமீபத்தில் சிட்டாடல் ஹனி பனி என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது மும்பையில் தான் செட்டில் ஆகி இருக்கிறார் சமந்தா. இதற்கிடையில் சமந்தா இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை சமந்தா தன்னுடைய திரிலாலா மூவி பிக்சர்ஸ் நிறுவனம் மூலமாக தயாரிக்க இருக்கிறார்.
இவருடைய தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தில் நடிக்கும் அனைவருக்குமே ஆண் பெண் பாகு பாடு இல்லாமல் சம்பளம் வழங்க இருக்கிறாராம் சமந்தா. இது குறித்து இயக்குனர் நந்தினி ரெட்டி சமீபத்தில் தெரிவித்துள்ளார். அதாவது நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கும் சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாகவே இருந்து வரும் நிலையில் இந்த விஷயத்தை சமந்தா ஒரு தயாரிப்பாளராக முன்னெடுத்திருக்கிறார். இது இந்திய சினிமாவில் யாரும் செய்யாத விஷயம் என்பதால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.