ஐசிசி டி20 உலக கோப்பை போட்டிகள் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இடம்பெறும் இந்திய அணையின் வீரர்கள் தேர்வு வருகின்ற 27ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்திய அணியில் இடம்பெறும் வீரர்கள் குறித்து இர்பான் பதான் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்‌.

அதோடு இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் குறித்தும் பேசியுள்ளார். அதாவது ரோஹித் ஷர்மா, ஜெய் ஸ்வால், விராட் கோலி ஆகிய மூன்று பேரும் தான் இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் என்றும் இவர்கள் கண்டிப்பாக டி20 உலகக் கோப்பை போட்டியில் இடம் பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் இதற்கு முன்னதாக இந்திய அணியில் இடம் பெற வேண்டிய ‌ வீரர்கள் பட்டியலை அவர் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.