நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடரில் நாட்டின் பெயரை இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என மாற்றும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

அதன்படி இந்தியாவின் பெயர் மாற்றம் குறித்த விவாதம் தேவையில்லாதது என்று நடிகையும் இயக்குனருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் எவ்வளவோ உள்ளது. அரசு அதில் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவின் பெயர் மாற்றம் குறித்து கருத்து கூறி சர்ச்சையில் சிக்க விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.