ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இந்த தொடரில் சுமார் 8 அணிகள் கலந்து கொள்ளும் நிலையில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் போட்டிகள் நடைபெறும். இதில் இந்திய அணிக்குரிய போட்டிகள் மட்டும் பொதுவான இடத்தில் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்த நிலையில் தற்போது இந்திய அணி மோதும் போட்டிகள் எங்கு எப்போது நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

அதன்படி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மோதும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும். குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் பிப்ரவரி 23ஆம் தேதி துபாயில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவை கண்டிப்பாக வீழ்த்தியே ஆக வேண்டும் என்று அந்த நாட்டு வீரர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பொதுவாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிகள் என்றாலே உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள். பாகிஸ்தான் வெல்ல வேண்டும் என்று பாகிஸ்தான் ரசிகர்களும் இந்தியா வெல்ல வேண்டும் என்று இந்திய ரசிகர்களும் நினைப்பது இயல்புதான். அந்த வகையில் தான் பாகிஸ்தான் பிரதமரும் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் வெல்ல வேண்டும் எனவும் அதேபோன்று கண்டிப்பாக இந்தியாவை வெல்வது முக்கியம் என்றும் அவர் அந்த நாட்டு வீரர்களிடம் கூறியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 23ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் இந்தியா மோதும் போட்டிகள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.