ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி 2-வது தனியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் போராடி கோப்பையை வென்றால் மொத்த உலகமும் உங்களை திரும்பிப் பார்க்கும் என கௌதம் கம்பீர் சஞ்சு சாம்சனுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, நீங்கள் தற்போது உலகக்கோப்பை போட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். எனவே இந்தியாவுக்கு வெற்றி பெற்று  கொடுக்க வேண்டும் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் இருப்பதால் நேரம் வரும்வரை காத்திருக்க வேண்டும். அதன் பிறகு தற்போது ஐபிஎல் தொடரிலும் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி வருகிறார். எனவே உலகக்கோப்பை போட்டியில் ஏற்கனவே விளையாடிய அனுபவத்தை வைத்து உங்களால் என்ன முடியும் என்பதை நீங்கள் இந்த உலகுக்கு காட்ட வேண்டும். மேலும் அப்போது மொத்த உலகமும் உங்களை திரும்பிப் பார்க்கும் என்று கூறியுள்ளார்.