
கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்ன கொள்ளியூர் என்கிற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது.
அந்த பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்காக பள்ளியின் ஆசிரியர்கள் மாலை அணிவித்து மேல தாளங்களுடன் உற்சாகமாக வரவேற்பளித்தனர். இதனையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவர்களின் பெற்றோர்களிடம் பேசினார்.
அப்போது அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்காக தமிழக அரசு வழங்கப்படும் பல்வேறு சலுகைகள் பற்றி கூறினார். மேலும் பள்ளியில் புதிதாக புதிதாக சேர்ந்த குழந்தைகளை அப்பகுதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
இதனால் பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் சந்தோசமாக உள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.