சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சியில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது. இந்நிலையில், இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். பெங்களூரில் டிச.16ம் தேதியும், சென்னையில், டிச.31ம் தேதி, கோவையில் டிச.2ம் தேதியும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கூறியுள்ளார். இது தொடர்பான போஸ்டரும் இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.