நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை நடிகர் விஜய் இன்று வழங்கினார். இதில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்துள்ளது. அந்தவகையில் இந்த நிகழ்வில் விஜயிடம் நிவாரண உதவி வாங்க வந்த பெண்மணி ஒருவர், விஜயை அடையாளம் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அருகில் இருந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், அந்த பெண்மணியை விஜய் அருகில் அழைத்துச் சென்றனர். விஜய் நிவாரண பொருட்களை வழங்கும் போது, விஜயிடமே அப்பெண் ‘இங்க யார் விஜய்’ என்று கேட்டார். அதற்கு விஜய், ‘நான்தான்மா விஜய்’ என சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.