
பிரபல ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. அதாவது செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனமான ஓபன் ஏஐ நிறுவனத்தின் மென் பொருளை இணைத்து புதிய தயாரிப்புகளில் ஈடுபடுத்த இருப்பதாக அறிவித்தது. இதற்கு தற்போது டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தங்களுக்கென தனி ஏஐ தொழில்நுட்பத்தை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கவில்லை.
அதற்கு பதிலாக ஓபன் ஏஐ மூலம் வாடிக்கையாளர்களின் தனி உரிமைகள் மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று கூறியுள்ளது அபத்தமானது. வாடிக்கையாளர்களின் தரவுகளை அந்த நிறுவனத்திடம் கொடுத்தால் அது என்ன ஆகும் என்பது பற்றி ஆப்பிள் நிறுவனத்திற்கு கவலை கிடையாது. ஓபன் ஏஐ தொழில்நுட்பத்தை ஓஎஸ் அளவில் ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளனர். ஒருவேளை இது மட்டும் நடந்தால் என்னுடைய நிறுவனங்களில் ஆப்பிள் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படும். ஆப்பிள் நிறுவனத்தின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாத விதிமீறல் ஆகும். என்னுடைய நிறுவனத்திற்கு வருபவர்கள் வாசலிலே தங்களின் ஆப்பிள் சாதனங்களை ஒப்படைக்க வேண்டும். மேலும் அவைகள் பத்திரமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.