
தேனி மாவட்டம் குமணன்தொழு பகுதியில் லாரி ஓட்டுனரான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மகாலட்சுமி என்ற மனைவியும் திலீப்குமார் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் திலீப் குமாருக்கு 13 வயது ஆகும் நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் சம்பவ நாளில் திலீப்குமார் டியூஷன் முடிந்து வீட்டிற்கு வந்த நிலையில் மகாலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது தன் அம்மாவிடம் சிறுவன் ப்ரைட் ரைஸ் சாப்பிட வேண்டும் என்று கேட்டுள்ளான். அவரும் தன் மகனுக்கு பணம் கொடுத்து வெளியே சென்று சாப்பிடுமாறு கூறிய நிலையில் சிறுவன் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வந்தது மகாலட்சுமி தினசரி ஏன் வெளியில் சாப்பிடுகிறாய் என கண்டித்துள்ளார்.
இது சிறுவனுக்கு மன வேதனையை ஏற்படுத்திய நிலையில் தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இதனைப் பார்த்து மகாலட்சுமி கதறி அழுத நிலையில் இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.