
பிரபல இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் கார்த்தி, பார்த்திபன், ரீமாசென், ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். ரிலீசான காலகட்டத்தில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் அவ்வளவாக வரவேற்பை வரவில்லை. சமீபத்தில் செல்வராகவன் அளித்த பேட்டியில் கூறியதாவது நிறைய பேர் என்னை எத்தனையோ முறை ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் குறித்து பேச சொல்லி இருக்காங்க. எனக்கு என்னமோ பேச தோணல.
அந்த படம் கொடுத்த ரணங்கள், மனசு முழுக்க காயங்கள், தழும்புகள் அது என்னைக்குமே கூட வலிச்சுக்கிட்டே தான் இருக்கும். எனக்கு பேச தோணல. அந்த அளவுக்கு யாரும் வலிய அனுபவித்து இருக்க மாட்டாங்க. அந்த படத்தை ஆரம்பிக்கும் போது ஒரு புது அனுபவமா மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தான் நினைச்சேன். அந்த படத்துல நடிச்ச நடிகர்கள், டெக்னீசியன் எல்லாருமே உயிரை கொடுத்து உழைச்சாங்க. ஒரு தங்கமான டீம் எனக்கு கிடைச்சாங்க. ஒவ்வொரு நாளும் பாம்புகள், தேள்கள், அட்டைகள் என எல்லாத்தோடும் போராடி ஷூட்டிங் எடுத்தோம்.
படம் ஷூட்டிங் நடந்துக்கிட்டு இருக்கும்போதே தயாரிப்பாளரை கூப்பிட்டு நீங்க நெனச்ச பட்ஜெட்டில் இந்த படத்தை எடுக்க முடியாது. நான் மீதி பணத்தைப் போட்டு படம் எடுக்கிறேன் உங்களுக்கு வட்டியோட அதை தந்துடறேன்னு சொன்னேன். ஆனா தயாரிப்பாளர் ரவீந்திரன் நல்ல மனுஷன். அவர் இன்னும் 5 கோடி கொடுக்கிறதா சொன்னாரு. அந்த 5 கோடிக்கும் மேல செலவு ஆனதால் நான் வட்டிக்கு கடன் வாங்கி படத்தை எடுத்தேன். ஆனால் படம் ரிலீஸ் ஆகி எல்லாமே தலைகீழ மாறிடுச்சு. அந்த நேரத்துல ஒவ்வொருத்தரும் குத்தி குத்தி கிழிக்கிறாங்க. ரத்தம், ரத்தமா துண்டு போடுறாங்க.
இவன் யாரு இப்படி படம் எடுக்குறதுக்குன்னு போஸ்டர் ஓட்டுறாங்க. எனக்கு ஒண்ணுமே புரியல. எதனால இப்படி நடக்குது நாட்கள் போகப்போக இன்னும் எதிர்ப்புகள் சேர்ந்துக்கிட்டே தான் போகுதே தவிர குறையவே இல்ல. இதுக்கு நடுவுல தான் ஆயிரத்தில் ஒருவன் படம் தெலுங்குல ரிலீஸ் ஆச்சு. அங்க மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. படம் நல்லா ஓடுது. அது கொஞ்சம் ஆறுதலா இருந்துச்சு. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிச்சவங்களுக்கும் அதற்காக உழைச்சவங்களுக்கும் அங்கீகாரம் கிடைக்கவே இல்லை. அதை நினைச்சு இன்னைக்கு வரைக்கும் அழுதுட்டு தான் இருக்கேன் என உருக்கமாக பேசியுள்ளார்.