
சிவகார்த்திகேயன் அமரன் படத்திற்கு பின் மதராஸி மற்றும் பராசக்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படம் என்ன? அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார்? என்பது குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவராத நிலையில் தற்போது ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்த படத்தை முதலில் வெங்கட் பிரபு இயக்க இருந்த நிலையில் தற்போது அவர் இயக்க வில்லையாம். இந்த நிலையில் மலையாள இயக்குனர் ஜுட் ஆண்டனி தான் சமீபத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்திடம் கதை கூறியுள்ளாராம். ஏற்கனவே சிவகார்த்திகேயன் கால்ஷீட் இவர்களிடம் இருக்கும் நிலையில் இந்த படத்தின் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கப் போகிறாராம். விரைவில் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.