
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். கடந்த 2004-ஆம் ஆண்டு தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினர் விவாகரத்து குறித்து அறிவித்தனர். இரு வீட்டார் பிரச்சனையை தீர்க்க பல முயற்சிகள் செய்தும் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. கடந்த ஆண்டு சென்னை குடும்ப நல நீதிமன்றம் தனுஷ் ஐஸ்வர்யா தம்பதிக்கு விவாகரத்து வழங்கியது.
View this post on Instagram
பட விழாக்களுக்கு செல்லும்போது தனுஷ் தனது மகன்களை அழைத்துச் செல்வார். அதே போல் ஐஸ்வர்யாவும் நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது மகன்களை அழைத்துச் செல்வார். தற்பொழுது யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் தனுஷ் ஐஸ்வர்யாவும் பங்கேற்றுள்ளனர். அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் யாத்ரா தனது பள்ளி படிப்பை முடித்துள்ளார். இருவரும் யாத்திராவை கட்டி அணைக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகிறது.