
ஒரு பெண் என்று நம்பப்படும் ரெடிட் (Reddit) பயனர், தனது வீட்டருகே உள்ள மொட்டை மாடியில் நின்ற ஒருவர், தன்னை பார்த்தபடியேஆபாசமாக நடந்து கொண்டதாக திகிலுடன் பதிவு செய்திருக்கிறார். அந்த நபர், தனது கால்சட்டையின் ஜிப்பை அவிழ்த்து கொண்டு, மாடியில் நின்றபடியே சுயஇன்ப செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், தன்னுடைய உணர்வுகளை பகிர்ந்து, “நான் வெறுப்படைகிறேன், பயப்படுகிறேன், என்ன செய்யவேண்டும் என தெரியவில்லை. இதில் காவல்துறையை ஈடுபடுத்த விரும்பவில்லை. பாதுகாப்பான, விவேகமான வழி ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள்” என்று கேட்டிருக்கிறார்.
அந்த நபரின் செயலை பதிவு செய்து புகைப்படங்களாக வெளியிட்டதற்காக, அவளுடைய ரெடிட் கணக்கு “NSFW” (Not Safe For Work) வகையாக குறிக்கப்பட்டு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மேலும் மனவேதனையில் உள்ளதாகவும், தன்னுடைய பாதுகாப்பு குறித்து பதட்டமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Caught my neighbor masturbating while staring at me – I feel violated and scared. What can I do without involving my family?
byu/Additional-Boat2649 inindiasocial
இக்குற்றச்சாட்டை முறையாக எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளை பல பயனர்கள் அளித்துள்ளனர்.
அதன்படி ஒருவர், “இது அவருக்கு முதல் முறையாக இருக்க வாய்ப்பே இல்லை. நீங்கள் புகார் செய்யாமல் விட்டுவிட்டால், எதிர்காலத்தில் மற்ற பெண்கள் பாதிக்கப்படலாம்” என்றார்.
மற்றொரு பயனர், “புகைப்படங்களை அந்த நபரின் குடும்பத்தினருக்கும் ஊடகங்களுக்கும் அனுப்புங்கள். மனதுன்புறுத்தல், அநாகரீக வெளிப்பாடு ஆகியவற்றுக்காக FIR பதிவு செய்யலாம்” என பதிவிட்டுள்ளார்.
இது பற்றி வழக்கறிஞர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “அந்த நபர் தனது சொந்த இடத்தில் இருந்தால், தனியுரிமை என்ற சட்ட அடிப்படையில் தற்காப்பு வாதம் முன்வைக்கலாம். ஆனால் இது அவரை முழுமையாக பாதுகாக்கும் என்பதில்லை. குற்றச்சாட்டினை உறுதிப்படுத்தும் சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவரின் மனநிலை முக்கியமானவை” என்றார்.
இந்த சம்பவம், சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள், சட்ட உதவிகளை பெறும் முக்கியத்துவம் குறித்து பலரும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இது போன்ற சம்பவங்களை அனுபவிக்கும் பெண்கள், தனியாகப் போராடாமல், நம்பிக்கையுடன் உரிய வழிகளில் உதவி தேட வேண்டும் என்பதே பலரின் கருத்தாக அமைந்துள்ளது.