
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் இபாத் அடிக் பால்கே என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குலாம் முர்ஷாதா என்பவரின் மகளை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இபாத் தனது தேனிலவை காஷ்மீரில் கொண்டாட ஆசைப்பட்டுள்ளார். ஆனால் குலாம் முர்தாஷா தனது மகளையும், மருமகனையும் வெளிநாட்டில் இருக்கும் புனித தளத்திற்கு செல்ல வேண்டும் என கூறியதால் தகராறு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் கோபமடைந்த மாமனார் தனது மருமகன் மீது ஆசிட் வீசி உள்ளார். இதனால் அலறி துடித்த மருமகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரது முகம் மற்றும் உடலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான மாமனாரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.