அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை சம்பவம். நாட்டிலேயே தமிழகத்தில் தான் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணைக்கு அண்ணா பல்கலை. நிர்வாகம், உயர்கல்வித்துறை முழு ஒத்துழைப்பு தருகின்றன. எந்த ஒரு மாணவியும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார். தேசிய மகளிர் ஆணைய விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவோம். படிப்பினையாக கொண்டு பல்கலை. வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம் என அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார்.