நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் அதிவேக பயணத்திற்காகவும் மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பாக சென்னை, பெங்களூரு மற்றும் டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை அமலில் இருக்கிறது.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஒரு மென்மையான நினைவூட்டல். இனி மெட்ரோ ரயில்களில் உணவு சாப்பிட அனுமதி கிடையாது. மேலும் அனைத்து பயணிகளும் சுமுகமான பயணத்தை மேற்கொள்ள இந்த விதிமுறையை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.