ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டரானது சிறந்த செயல் திறனையும், நீண்ட காலத்திற்கான நம்பகத்தன்மையையும் கொண்டு இருக்கிறது. நாட்டின் பிரபலமான ஹோண்டா நிறுவனமானது கூடியவிரைவில் தன் புது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த இருக்கிறது. ஜப்பானிய பிராண்ட் ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்துவதாகவும், டிவிஎஸ் ஐகியூப், ஏதர் 450 எக்ஸ் மற்றும் ஓலா எஸ்-1 ஆகிய ஸ்கூட்டர்களுக்கு நேரடி போட்டியாக அதனை நிலைநிறுத்துவதாகவும் உறுதிப்படுத்தியது.

தொடக்கத்தில் வரவுள்ள ஹோண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆக்டிவா எனும் பிராண்ட் பெயரில் வீரப்பனை செய்யப்படும் எனவும் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் தனது ஸ்கூட்டர் அறிமுகமாகும் எனவும் நிறுவனமானது உறுதிப்படுத்தி இருக்கிறது. புது ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி பேக்குகள் மற்றும் இ-மோட்டார் ஆகிய பல்வேறு கூறுகளை உள்நாட்டிலேயே பெறுகிறது. இதன் விலையானது சுமார் 1 லட்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.