தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா தற்போது ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நேற்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் நடிகை நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் முதல் முறையாக நயன்தாரா குழந்தைகளை வாங்கிய போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

நயன்தாராவின் மகன்கள் முதல்முறையாக அவரின் முகத்தை தொடும்போது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் நயன்தாரா கண்கலங்கி அழுதார். மேலும் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் வாடகை தாய்முறையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.