
சென்னையில் நேற்று தனது வழக்கமான வேலையை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் முடித்தார். அதன் பின்பு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு விரைவு பேருந்து மூலம் தனது ஊருக்கு திரும்பினார். அப்போது பேருந்தில் பயணம் செய்த பயணிகளிடம் குறைபாடுகளை கேட்டு அறிந்தார். முதலில் அவர் பயணிகளிடம் பேருந்து சேவையில் ஏதும் குறைபாடு உள்ளதா? என்று கேட்டறிந்தார்.
சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்திலிருந்து அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் பயணம்! pic.twitter.com/cEGTMJ3xGO
— Sivasankar SS (@sivasankar1ss) May 20, 2025
அதன் பின் ஓட்டுனர் இருக்கைக்கு பின்னால் உள்ள இருக்கையில் அமர்ந்துக்கொண்டு தனது ஊருக்கு சென்றார். மேலும் ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் அவர்களின் செயல்பாடுகளை கேட்டு அறிந்தார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அரசு பேருந்தில் பயணம் செய்த வீடியோவை அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.