காவிரி விவகாரத்தில் விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக அரசை கண்டித்து வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி கும்பகோணத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று சற்றுமுன் பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்ததும் காவிரி நீர் திறக்கப்படவில்லை எனவும் கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டிக்காமல் கண்துடைப்பு தீர்மானத்தை திமுக அரசு கொண்டு வந்துள்ளது என்று குற்றம் சாட்டிய அண்ணாமலை அக்டோபர் 16ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.