பொதுவாகவே மக்கள் அனைவருமே ஆரோக்கியமான உணவு வரை மற்றும் உணவு பழக்கத்தை அதிகம் விரும்புகின்றனர். அப்படி தினமும் எடுத்துக் கொள்ளும் உணவு முறை மட்டும் உடற்பயிற்சி என்பவற்றை தொடர்ந்து நாம் பின்பற்றி வருகின்றோம். தினமும் கீரை உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமான ஒன்றாக உள்ள நிலையில் கீரைகளை கடைகளில் வாங்கும் போது அளவுக்கு அதிகமாக வாங்கி வைத்துக் கொள்வார்கள்.

ஆனால் அவ்வாறு அளவுக்கு அதிகமாக வாங்கி வைக்கும் போது அவை நீண்ட நாட்களுக்கு புதிது போல இருக்காது. இரண்டு அல்லது மூன்று நாட்களில் கருப்பாகி பழுதாகிவிடும். அதிலும் குறிப்பாக வெயில் காலங்களில் வாங்கினால் சீக்கிரம் அழுகிவிடும். இந்தக் கீரைகளை வாங்கி பழுதாகாமல் வைக்க என்ன செய்ய வேண்டும் என இந்த பதிவில் பார்க்கலாம்.

அதன்படி குளிர்சாதன பெட்டியில் கீரையை சேமிக்கும் போது காய்கறி டிராயரில் வைக்க வேண்டும்.

கீரையை மற்றும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்து எப்போதுமே விளக்கி வைக்க வேண்டும்.

கீரையை சேமித்து வைப்பதற்கு முன்பு கழுவினால் முதலில் சாலட் ஸ்பின்னரை பயன்படுத்தி உலர்த்தி அதன் பிறகு சேமித்து வைக்க வேண்டும்.

கீரையை ஈரமான பையில் இருந்தால் பிளாஸ்டிக் பைகளில் வைத்து சேமிப்பது தவிர்க்க வேண்டும்.

கீரையை புதிதாக வைத்திருக்க கீரையின் தண்டுகளில் இருந்து இலைகளை துண்டு துண்டாக வெட்டி காற்று புகாத ஒரு பையில் போட்டு ஃப்ரீசரில் வைத்து விடலாம்.

கீரையை காற்று புகாத பாத்திரத்தில் வைப்பதற்கு முன்பு கீரையை கழுவாமல் ஒரு மெல்லிய துணி கொண்டு துடைப்பது நல்லது.

மேலும் கீரை கட்டுகளை வாங்கியதும் தேவையில்லாத இலைகளை அகற்றி விட்டு செய்தித்தாள் கொண்டு கீரைகளை சுற்றி வைத்தால் அழுகாமல் நன்றாக இருக்கும்.