தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் தலைப்பு எழுத்து, பெயர் மற்றும் பிறந்த தேதி என ஏதாவது பிழை இருந்தால் திருத்தம் செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்று மற்றும் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றை சேர்த்து தொடர்புடைய பள்ளி தலைமை ஆசிரியர் மூலமாக செப்டம்பர் 8ம் தேதிக்குள் மாவட்ட தேர்வு துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இணையதளம் மூலமாகவும் செப்டம்பர் 22ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே தனித்தேவர்களிடமிருந்து பெறப்படும் அசல் சான்றிதழ்களை உரிய ஆவணங்களுடன் தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.