மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மிகவும் பரபரப்பான ட்ராம்போ பகுதியில் உணவகம் ஒன்றில் ஷவர்மா சாப்பிட்ட 19 வயது இளைஞர் பிரதமேஷ் போக்சே உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் இருவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பில் போலீசார் கூறும் போது, “சம்பவம் நடந்த பகுதியில் பல கடைகளில் சட்டவிரோதமாக சுகாதாரமற்ற இறைச்சியைப் பயன்படுத்துவதாக சந்தேகிக்கிறோம், மிக மோசமான சூழல்களில் தான் பல கடைகள் நடத்தப்படுகிறது” என்றனர்.