விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் இப்போது கோபி எப்போதும் குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடப்பது போல தான் காட்சிகள் வந்துகொண்டிருக்கிறது. அதேபோல் வீட்டில் ராதிகா மற்றவர்களுடன் தொடர்ந்து சண்டை போட்டுவரும் சூழலில், கோபி தினசரி குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடக்க, அவரது அம்மா தான் சென்று அழைத்து வருகிறார்.

இந்த நிலையில் கோபியாக நடித்து வரக்கூடிய சதிஷ் இன்ஸ்டாகிராமில் தான் வீல்சேரில் இருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதனை பார்த்த நெட்டிசன்கள் பாக்கியலட்சுமி சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்ட் வருகிறதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு Just for fun என குறிப்பிட்டு நான் நன்றாக தான் இருக்கிறேன் என கோபி விளக்கம் கொடுத்திருக்கிறார்.