தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.  இந்நிலையில் கடவுள் இல்லை என்று சொல்பவர்களை கண்டு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு மேம்பட்டு இருக்கிறது. விஞ்ஞானிகளால் ஒரு சொட்டு ரத்தத்தை உருவாக்க முடியுமா? இதெல்லாம் தெரிந்திருந்தும் கடவுள் இல்லை என்று சொல்பவர்களை கண்டு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை” என்று பேசியுள்ளார்.