இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பெங்களூர் அணி இறுதி சுற்றுக்கு முன்னேறிய நிலையில் நேற்று நடைபெற்ற வெளியேறுதல் சுற்றில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி பஞ்சாப் அணியுடன் மோதும் நிலையில் அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் இறுதி சுற்றுக்கு முன்னேறுவார்கள்.

இந்நிலையில் நேற்று  நடைபெற்ற போட்டியில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதிய நிலையில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்தது.

 

அதன் பிறகு குஜராத் அணி களம் இறங்கிய நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. இதனால் மும்பைஅணி  20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் குஜராத் அணி வெளியேறிய நிலையில் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் குழந்தைகள் அழுத வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது குஜராத் அணியின் தலைமை பயிற்சிளாக ஆஷிஷ் நெஹ்ரா இருக்கிறார். இவரது குழந்தைகள் தான் குஜராத் அணியின் தோல்வியை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதனர். அதோடு சுப்மன் கில்லின் சகோதரியும் அழுதார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.