தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வரும் நிலையில் கன்னட சினிமாவிலும் சிவராஜ்குமார் நடிக்கும் படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தெலுங்கு சினிமாவில் நடிகர் வெங்கடேஷுடன் சேர்ந்து சங்கராநிதிக்கு வஸ்துண்ணம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் மீனாட்சி சவுத்திரியும் நடித்துள்ளார். தற்போது படத்தின் ப்ரோமோஷன் வேலைகளையும் பட குழு ஈடுபட்டுள்ள நிலையில் மேடையில் ஐஸ்வர்யா ராஜேஷ் செய்த ஒரு விஷயம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

அதாவது வெங்கடேஷ் நடிகை மீனாட்சி சவுத்ரி தோள் மீது கை போட்டவாறு பேசி கொண்டிருந்தார். அப்போது ஐஸ்வர்யா ராஜேஷ் மேடையில் அமர்ந்திருந்த  திடீரென மீனாட்சி சவுத்ரியை தள்ளிவிட்டு நடிகர் வெங்கடேஷ் அருகே நின்று கொண்டார். நடிகர் வெங்கடேஷ் ஐஸ்வர்யா தோள் மீது கை போட்டு பேசினார். இந்த படத்தில் வெங்கடேஷுக்கு ஐஸ்வர்யா மற்றும் மீனாட்சி சவுத்ரி இருவரும் மனைவியாக நடித்துள்ள நிலையில் முதல் மனைவியாக மீனாட்சி சவுத்ரியும் இரண்டாம் மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் மேடையில் ஐஸ்வர்யா ராஜேஷ் செய்த விஷயம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.