மக்களவை பொதுத் தேர்தல் தொடர்பான ஆறாவது கட்ட அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், 7 மாநிலங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 25-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. பீகாரில் 8, ஹரியானாவில் 10, ஜார்கண்டில் 4, ஒடிசாவில் 6, உத்தரபிரதேசத்தில் 14, மேற்கு வங்கத்தில் 8 மற்றும் டெல்லியில் 7 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அந்தந்த மாநிலங்களில் இன்று முதல் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.