போக்குவரத்து கழகங்களில் தொழில் பலகுணர் பயிற்சி பெறுவதற்கு விருப்பம் உள்ளவர்கள் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓராண்டு தொழில் பழகுணர் பயிற்சி வழங்கப்படுகின்றது. அதன்படி 2019 முதல் 2023 ஆம் ஆண்டு வரை மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் பொறியியல் பிரிவில் டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்பை முடித்த 335 பேருக்கு தொழில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

அவர்களில் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ஒன்பதாயிரம் ரூபாய் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு 8000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் இந்த பயிற்சியை பெற விருப்பம் உள்ளவர்கள் www.boat-srp.com  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.