உ.பி.யில் பிரபல தாதாவும், அரசியல்வாதியுமான முக்தார் அன்சாரி (63) மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட காரணமாக இவர் கடந்தாண்டு தண்டனை பெற்று, லக்னோ சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில் இன்றிரவு அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.