பெங்களூரை சேர்ந்த சூர்யா என்பவர் தனது நண்பர்கள் மூன்று பேருடன் இணைந்து தீபாவளி அன்று இரவு தாபா ஒன்றிற்கு தீபாவளி ஃபோட்டோ ஷூட் எடுப்பதற்காக சென்றுள்ளார். அங்கு டிஜிட்டல் கேமரா மூலமாக நண்பர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் மற்றொரு குழுவினர் தங்களையும் புகைப்படம் எடுக்கும் படி கேட்டுள்ளனர்.

முதலில் இதற்கு மறுத்த சூர்யா பின்னர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் புகைப்படம் எடுத்தவுடன் தங்களது வாட்ஸ் அப்பில் உடனடியாக அந்த புகைப்படங்களை அனுப்ப வேண்டும் என்று அந்த குழு கேட்டுள்ளனர். அதற்கு சூர்யா மற்றும் நண்பர்கள் நேரடியாக புகைப்படங்களை அனுப்ப முடியாது என்றும் கணினியில் ஏற்றி சாஃப்ட்வேர் மூலமாக தான் அனுப்ப முடியும் என்றும் கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த குழு வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒரு கட்டத்தில் சூர்யாவை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சூரியாவை நண்பர்கள் இணைந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சூர்யா பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.