சென்னையில் மெட்ரோ ரயில் பயணம் என்பது தற்போது மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்தும் நோக்கத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகளை தொடங்கியுள்ளது. இந்நிலையில் மெரினா கடற்கரையில் வரைய இருக்கும் மெட்ரோ ரயில் நிலையம் குறித்து புதிய தகவலை நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

அதாவது தற்போது உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் சென்னை சென்ட்ரல் நிலையம்தான் பெரியது. அதைவிட பிரம்மாண்டமான முறையில் மெரினா கடற்கரையில் நிலையம் அமைய உள்ளது. தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பெரும் சவால்களை எதிர்த்து நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.