மத்திய அரசாங்கம் கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியம் மற்றும் குழந்தை பராமரிப்பு உறுதி செய்வதற்கு பிரதான் மந்திரி மாதுரு வந்தனா யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் தங்களை கவனித்துக் கொள்ளவும், குழந்தை பிறந்த பிறகு தங்களுடைய குழந்தையின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யவும் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் கர்ப்பிணி பெண்களுக்கும், அவர்களுடைய குழந்தைகளுக்கும் பலனளிக்கிறது.

19 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள் இந்த திட்டத்திற்கு தகுதியுடையவர்கள். அங்கன்வாடி அல்லது சுகாதார நிலையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். முதல் குழந்தைக்கு மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் பலன் கிடைக்கும். முன்பு அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சலுகைகள் கிடைத்து வந்த நிலையில் தற்போது தனியார் மருத்துவமனைகளும் சேர்க்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் மட்டுமே தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். பணிபுரியும் பெண்களுக்கு கிடையாது. ஆனால் தொழிலாளர்களாக பணிபுரியும் பெண்கள் சேர்க்கப்படுகிறார்கள் .இந்த திட்டமானது பெண்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்றுள்ளது.